கம்ப்யூட்டரின் வளர்ச்சியை பல்வேறு தலைமுறைகளாகப் பிரித்தது போல, தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளையும் அவ்வாறு பிரிக்க முடியும். குறிப்பாக கவனம் செலுத்த வேண்டியது, ஒரே ஒரு தொலைத் தொடர்பு அம்சம் மட்டுமே - வயர்லெஸ் டெலிஃபோன் - பயனாளர் பாஷையில் ‘செல்போன்’.

உங்கள் செல்ஃபோன் வேலை செய்வது எப்படி? செல்போன், உங்கள் அருகாமையில் உள்ள “கம்யூனிகேஷன் டவர்” உடன் தொடர்பு கொண்ட பிறகு, அந்த “டவர்” உங்களை உலக நெட்வொர்க்கில் இணைத்து விடுகின்றது. டவரின் உயரத்துக்கேற்ப அது தொடர்பு ஏற்படுத்தக் கூடிய பரப்பளவு அதிகரிக்கும் . சிறு வயதில், டி.வி.யின் ஆண்டெனாவை தந்தை வீட்டின் மொட்டை மாடியில் வைத்து, டி.வி. தெரிகின்றதா என்று பார்க்கச் சொல்வாரே, அது போலத்தான்! அத்தனை டவர்களையும் ஒரு “நெட்வொர்க்” இணைத்து வைக்கின்றது. அப்படி இணைக்கும் நெட்வொர்க்குகளைப் பற்றித்தான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றோம்.

GSM மற்றும் CDMA என இரு தொழில்நுட்பங்கள் செல்போனில் உண்டு. ரிலையன்ஸ், டாட்டா இண்டிகாம் போன்ற நிறுவனங்கள் CDMA வசதியைத் தருகின்றன. இதர நிறுவனங்கள், எடுத்துக்காட்டாக, ஏர்டெல், வொடாஃபோன் போன்றவை GSM உபயோகப்படுத்துகின்றனர். இவை இரண்டுமே 2G நெட்வொர்க்கின் வகைகள்.

ஓ! அப்படியென்றால் 2G என்ற ஒன்றும் உண்டா! ஆம், இத்தனை நாட்களாக நாம் (ஏன், இன்னும் கூடப் பெரும்பாலானவர்கள்) உபயோகிப்பது 2G நெட்வொர்க்குகளைத்தான். அதற்கு முன்னால், 1Gயும் உண்டு. இரண்டாம் உலகப்போரின் சமயம், ரேடியோ ஃபோன்களின் மூலம் பேசிக் கொண்டார்களே, அது 0G நெட்வொர்க் ஆகும். “தொலைதூரம்” என்று சொல்ல முடியாவிட்டாலும், அதுவும் வயர்லெஸ்தானே!

1G நெட்வொர்க்குகளின் மூலம்தான் முதன் முதலில் உலகில் இருக்கும் அனைத்து செல்ஃபோன்களையும் இணைக்க முடிந்தது. இது நடந்தது கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால். இந்த நெட்வொர்க்குகள் உபயோகித்தது அனலாக் சிக்னல்களை. (அனலாக் என்றால் - நேரத்துடன் தொடர்ச்சியாக மாறும் சிக்னல்கள்). 1991ல் முதன் முறையாக அனலாகுக்கு டாட்டா சொல்லிவிட்டு, டிஜிடலினுள் செல்ஃபோன் குதித்தது. டிஜிடல் என்றால்? தொடர்ச்சியாக மாறாமல், விட்டு விட்டு மாறும் சிக்னல்கள். இதற்கு மேல் விளக்கம் தேவை என்றால், உங்களுக்குத் தெரிந்த எலக்ட்ரிகல்/எலெக்ட்ரானிக்ஸ் பயிலும் மாணவர்களை (ஏன், ப்ளஸ்-டூ மாணவர்கள் கூடப் போதும்!) கேளுங்கள், அழகாக படம் வரைந்து விளக்கம் தருவார்கள்.

அது சரி, இந்த 2Gயால் என்ன லாபம்? கண்கூடாகத் தெரியவில்லையா - அதன் பிறகுதான் பாமரனும் செல்ஃபோன் உபயோகிக்க ஆரம்பித்தான். ஸ்டோரேஜ் என்று சொல்லப்படும் “செய்திகளைச் சேர்த்து வைத்தல்” மிகவும் சுலபமானது. (ஒரே அலைவரிசையில் இன்னும் நிறைய கால்களை அனுமதிக்க முடியும்!)

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது 3G வந்திருக்கின்றது! புதிதாக என்ன சாதித்திருக்கின்றார்கள்? 2Gயில் என்ன குறை கண்டார்கள்?!

முன்பெல்லாம் செல்ஃபோன்களைப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தோம். GSM போன்ற 2G நெட்வொர்க்குகளுக்கு இது சர்வ சாதாரணம். அவைகளின் முக்கிய வேலையும் அதுதான். அவ்வப்பொழுது, இணையதள வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்துக்கும், அதன் வேகத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. (“இல்லையே, என் ஃபோன் வேகமா இருக்கே” என்று நீங்கள் சொன்னால், பதில் இதுதான் “சின்னச் சின்ன இணையப் பக்கங்களை நீங்கள் பார்ப்பதால்தான். ஒரு நூறு எம்.பி ஃபைலை தரவிறக்க முயற்சி செய்யுங்கள், உங்கள் ஃபோன் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்!)

அது மட்டும் இல்லை, இணைய வசதிகளை 2G தருவதற்கு, நீங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். காரில் பறந்து கொண்டே இணையத்தின் மூலம் சினிமா பார்க்க முடியாது. ஏன், ஒரு பக்கத்தைத் தரவிறக்குவதே கடினம்தான். ரயில்களில் செல்லும்பொழுது செல்ஃபோன் வேலை செய்யாமல் படுத்துமல்லவா, அதைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்!

போதாத குறைக்கு, இப்பொழுது காலம் மாறிவிட்டது, செல்ஃபோன் பேசுவதற்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல. நமக்கு செல்ஃபோனிலேயே எல்லாம் வேண்டும். என் மொத்தப் பாடல் தொகுப்பு, பத்துப் பதினைந்து திரைப்படங்கள், ஈ-மெயில், இணையம், எல்லாமும் செல்ஃபோனிலேயே வேண்டும். 2Gயால் இது முடியாது - அதனால்தான் வந்தது 3G.

3G அனைத்துக்கும் பதில் வைத்திருக்கின்றது. சரி, என் போன்ற பொறியாளர்களுக்காக சில கணக்குகள் - 2G தரும் வேகம் கிட்டத்தட்ட பத்து கிலோபைட், ஒரு வினாடிக்கு. அந்த வேகம் ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே. நாம் நகர்ந்து கொண்டே இருந்தோமானால் இதுவும் வராது. 3G எவ்வளவு தருகின்றது? கிட்டத்தட்ட இரண்டாயிரம் கிலோபைட்ஸ், ஒரு நொடிக்கு - ஒரே இடத்தில் இருந்தால்! அதி வேகத்தில் பறந்துகொண்டே 3G நெட்வொர்க்கை நோண்டினால், கிட்டத்தட்ட நொடிக்கு முன்னூறு கிலோபைட்ஸ்!!

இனி ட்ரெய்னில் போய்க்கொண்டே, செல்ஃபோனைக் கையில் வைத்த படி உலகைக் கை வசப்படுத்த முடியும். “லேட் ஆகி விட்டது” என்று அவசரக் கடிதம் எழுதலாம். செல்ஃபோன் பில் மட்டும் அல்லாது, எல்லா பில்களையும் உள்ளங்கையிலேயே கட்டி விடலாம். பேங் அக்கவுண்ட்களைப் பராமரிக்கலாம். ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும்பொழுது தொலைந்து போனால், கூகில் மேப்ஸ் உதவியுடன் எங்கிருக்கின்றோம் என அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஏன், சினிமா பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், கதை படிக்கலாம், அரட்டை அடிக்கலாம் (வீடியோ உடன் கூடிய அரட்டை) - எல்லாம் உள்ளங்கையிலேயே!

ஒரே வரியில் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இதற்கு முன் இருந்த செல்ஃபோன் நெட்வொர்க்களையும், ப்ராட்பேண்ட் தர இணையதள நெட்வொர்க்குகளையும் 3G ஒன்றாக இணைத்துவிட்டது.

நீங்கள் நினைக்கலாம் - நான் இந்தக் கட்டுரையை 3G நெட்வொர்க் ஃபோனில்தான் தட்டச்சு செய்கின்றேன் என - இல்லை! முக்கியமான காரணம், இன்னும் 3G நெட்வொர்க் ஃபோன்கள் சற்று விலை அதிகமாகவே விற்கின்றன. சரவணா ஸ்டோர்ஸில் ஆயிரம் ரூபாய்க்கெல்லாம் கிடைக்காது. இதில் நிறைய லைசென்ஸ் தகராறெல்லாம் வேறு உள்ளது. எல்லாப் பிரச்சினைகளையும் மீறி ஒரு வழியாக நம் நாட்டில் 3G ஃபோன்கள் வந்துவிட்டன. வரவேற்போம்! கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்கள் போராடி இது எல்லா நாடுகளிலும் கிடைக்கும்படி செய்திருக்கின்றார்கள். முன்பு சொல்லியிருந்தது போல, ஒவ்வொரு நாட்டிற்கும் தனியாக லைஸென்ஸ் பெற வேண்டும்.

சரி, ஏழெட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தது இப்பொழுது பிரபலமாகி விட்டது. 4G நெட்வொர்க்குகளைப் பற்றிய ஆராய்ச்சி தீவிரமாக நடக்க ஆரம்பித்து விட்டது. ஒரே வரியில் அதைப் பற்றிச் சொல்கிறேன்! ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. முகவரி இருப்பதை நாம் அறிவோம்! அது போல, ஒவ்வொரு செல்ஃபோனுக்கும் ஒரு ஐ.பி. முகவரி இருந்தால் எப்படி இருக்கும்!! சிந்தனை செய்தால், எனக்கு தலை எல்லாம் சுற்றுகிறது! இன்னும் நான்கைந்து வருடங்களில் 4G பற்றிய விரிவான கட்டுரையை நீங்கள் எதிர்பார்க்கலாம்!


எனது நண்பர் வெற்றி வேந்தன் அவர்கள் மெயில் முலம் எனக்கு அனுப்பியது

இரண்டு லட்சம் கொடுத்து
வாங்கினேன் - அரசு வேலை
லஞ்ச ஒழிப்பு துறையில் ......

வெள்ளை என்பது சமாதனம் அல்ல
பேசிகொன்டன மீன்கள்
கரையில் கொக்கு !

மறு கன்னத்தையும்
காட்டினேன்
அடித்தது காதலி

மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
திலகவதி டீச்சர்
வகுப்பின் முதல்நாளன்று
முன்பொருமுறை எங்களிடம் கேட்டார்
"படிச்சி முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க ?".

முதல் பெஞ்சை யாருக்கும்
விட்டுத்தராத உஷாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள் கோரசாக!

இன்று கல்யாணம் முடித்து
குழந்தைகள் பெற்று
ரேசன்கடை வரிசையில்
உஷாவையும்
கூந்தலில் சொருகிய சீப்புடன்
குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதையும்
எப்போவதாவது பார்க்க நேர்கிறது

"என்ஜீனியர் ஆகப் போகிறேன் "
என்ற அருண்குமார்
பாதியில் கோட்டடித்து
பனியன் கம்பெனி வேலைக்கு
போய்விட்டான்

"எங்க அப்பாவுடைய
இரும்புக்கடையைப் பாத்துப்பேன் "
கடைசி பெஞ்சு சந்திரபாபு
சொன்ன போது
எல்லாரும் சிரித்தார்கள்
இன்றவன் ஆஸ்திரேலியாவில் MBA
படித்துக்கொண்டே டாலராக
சம்பாதிக்கிறான்

அனுவிஞாநியாவேன் என்று சொல்லி
ஆச்சரியங்களில் எங்களை தள்ளிய
ஆனந் இப்போது
TNPSC எழுதி
கடைநிலை உழியனானான்

ப்ளைட் ஓட்டுவேன்
என்ற நான்
கணினியை துடைத்தபடி
காலம் தள்ளுகிறேன்

வாழ்க்கை காற்று எல்லாரையும்
திசைமாற்றி போட
" வாத்தியாரவேன் " என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராக பணியாற்றுகிறான்

" நெனச்ச வேலையே செய்ற
எப்படிருக்கு மாப்ளே ?" என்றேன்

சாக்பீஸ் துகள்கள் படிந்த விரல்களால்
என்கையை பிடித்து
" படிச்சு முடிச்சதும் என்ன
ஆகப் போறீங்க ?" ன்னு
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை " என்றான் ......

என்னிடம் சிறு மனஸ்தாபம் கொண்டு விலகிய என் தோழிக்கு நான் எழுதி கொடுத்த கவிதை இது

தோழியே ......

நீ எதிர்பார்கிறபடி நடப்பதற்காக
நான் இவ்வுலகில் பிறக்கவில்லை

நான் எதிர்பார்கிறபடி நடப்பதற்காக
நீயும் இவ்வுலகில் பிறக்கவில்லை

உன்வேலையை நீ பார் !
என் வேலையை நான் பார்கிறேன் !

வாழ்க்கை சுழற்சியில் என்றாவது ஒரு நாள்
நாம் சந்திப்போமானால் - அன்று
ஒரு நாள் மட்டும் நட்பு கொள்வோம்

ஏனென்றால்

நிறைவேற பொறுப்புகள் பல காத்துகொண்டிருக்கின்றன
உனக்கு மட்டுமல்ல எனக்கும் தான் .......

மரணிக்கு முன் ஒரு நிமிடம்
எழுதிவிடுகிறேன்
உங்கள் தீராத
மனப் பக்கங்களில்

ஒவ்வொரு முறை
இதயம் துடித்து
அடங்கும் போதும்
ஓராயிரம் எண்ணக் குமுறல்கள்
இதயத்தின் ஓரத்தில்
உடைப்பெடுத்து
ஆங்காங்கே அடைத்துப்
பின் பெருவலியோடு
மூளையில் மையம் கொள்ளும்

பலருக்குத் தொண்டைக் குழிக்குள்
அடைந்து கொண்டவைதான்
எனக்கோ விரல்களின் வழியே
வீழ்கின்றன
இவைகளை
எழுதாத இரவுகள்
இனப் படுகொலைகளைப் போலவே
முடிவின்றி நீள்கின்றன

ஒருபுறம்
இனங்களுக்கிடையே போராட்டம்
மறுபுறம்
ஓரினத்திற்குள்ளேயே மாறாட்டம்
எதைத் தொட
எதை விட... ?

இரவின் நிசப்தத்தைக்
கிழித்துச் செல்லும்
பல்குழல் எறிகணை போல்
ஓங்காரமாய் ஓலமிடும்
இனவெறிகள்

கறைகளோடே
சுத்தம் பற்றிப் போதிக்கும்
நம் சாதீயச்
சவர்க்காரங்கள்
எத்தனைமுறை வெளுத்தாலும்
கரைவதேயில்லையே ஏன்?

இவைகளை
எழுதாத இரவுகள்
இனப் படுகொலைகளைப் போலவே
முடிவின்றி நீள்கின்றன...

நாங்கள் செல்லும் பாதைகளிலெல்லாம்
மேடு பள்ளங்கள் கிடையாது - ஆனால்
குண்டும் குழியும் நிறையவே உண்டு
குறுகிக்கொண்டு ஒளிந்து கொள்ள.

எங்கள் பள்ளித் தோட்டத்தில்
பூக்கள் கூட நிலைத்திருக்கும்
வகுப்பில் உள்ள பிஞ்சுகளுக்கோ
எந்த நிமிடமும் முள்ளிருக்கும்.

வேலைக்குச் செல்லும் கணவனின் வாகனம்
அழகாய் ஓரத்தில் நின்றிருக்கும்
கண்ணீரோடு யோசிக்கும் மனைவி
எந்தத் துப்பாக்கி அவரைக் கொன்றிருக்கும்?

அம்மா வாங்கிய மளிகைப் பொட்டலம்
அலுங்காமல் அப்படியே தரையிருக்க
அம்மா வந்தாளே பொட்டலமாய்
எங்கே சொல்லி அழுது தீர்க்க?

தேவைகளைப் பூர்த்தி செய்ய
தேவைப் பட்டதை வாங்கினோம்
அவை இன்று தேவையில்லை
பதுங்கு குழியில் இடமுமில்லை.

கடலில் துளியாய் எங்கள் தேசம்
தேசம் முழுதும் கண்ணீர்த் துளிகள்
துளித்துளியாய்ப் போகின்ற அப்பாவி உயிர்கள்
உயிர்களற்ற தேசத்திற்குப் போராட்டம் ஏனோ?

கவர்ன்மெண்ட் ஆபீசர்

வ‌ெ‌ட்டியா‌ன் 1: செத்துப் போனவர் கவர்ன்மெண்ட் ஆபீசர்னு எப்படி சொல்ற?

வெ‌ட்டியா‌ன் 2 : நீட்டின கையை மடக்கவே முடியலையே

?!?!?!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்ன சார் உங்க பத்திரிகைக்கு இவ்வளவு ஜோக்ஸ் அனுப்பி வச்சுருக்கேன் எதுக்குமே பணம் தரமாட்டேண்றீங்களே?

இது கூட நல்ல ஜோக்தா‌ன்! ஆனா இதுக்கும் பணம் தர முடியாது!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அண்ணாச்சி கடையில போய் திருடணும்னா உனக்கு என்ன தைரியம்?

எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோன்னு அவங்கதான எசமான் விளம்பரம் செஞ்சாங்க!

ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா

சமீபத்தில் இணையத்தில் நான் படித்தது

இந்த சில நாட்களுக்கு முன்னர் நான் எனது வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது சிறிய விபத்து ஒன்று ஏற்பட்டது , நான் வண்டியில் இருந்து நிலைதடுமாறி ரோட்டில் விழுந்து விட்டேன் , கிழே விழுந்து கிடந்த என்னை தூக்கிவிட பலர் வந்தனர் அதில் ஒரு மலையாளியும் ஒருவர் ,

இதை ஏன் இங்கே சொல்லுகிறேன் என்றால் ஒரு தமிழன் இங்கு விழுந்ததிற்கு அவனுக்கு கைகொடுக்க பலர் வந்தனர் , ஆனால் இலங்கையில் எனது உறவினர்கள் கொட்டு கொத்தாக குண்டு வீசி கொன்றபோதும் இப்போது அகதிகள் என்ற பெயரில் திறந்த வெளி சிறைச்சாலையில் அவர்களை அடைத்து ஒருவேளை உணவுமட்டும் கொடுத்து சிறிது சிறிதாக கொள்ளப்படும் என் சொந்தங்களுக்கு கைகொடுக்க யாரும் வரவில்லையே ???? ஏன் ? தெரிந்தால் யாரும் சொல்லுங்கள் , மனிதநேயம் இவ்வளவு தானா ? , கண்முன் நடந்தால் மட்டுமே உதவிக்கு ஆள் வருவார்களா , ஒருவேளை ஈழ தமிழர்கள் நிலைமை தமிழ் நாட்டு மக்களுக்கு வந்தால் நமக்கும் அந்த கதி தானா ?

நான் ஓர்குட் வன்னியர் குழுவில் நிர்வாகியாக இருக்கிறேன் , நான் முன்பே வன்னியர் கவிதை ஒன்று எழுதி இருந்தேன் அக்குழுவின் உறுப்பினர் நண்பர் கார்த்தி என்பவரும் ஒரு கவிதை எழுதி இருந்தார் , இந்த இரண்டு கவிதைகளையும் குழுவின் முகப்பில் போடுமாறு குழு உரிமையாளர் மணிகண்டன் அவர்களிடம் சொல்லிருந்தேன் ஆனால் அதிக வார்த்தைகள் இடம்பெற இயலாது என்று மணிகண்டன் எனது கவிதை மட்டும் இடம்பெற செய்துவிட்டார்

நண்பர் கார்த்தி என்னை விட நன்கு கவிதை எழுதும் திறன் கொண்டவர் , குழுவில் எனது கவிதை மட்டும் இடம் பெறுவதால் என்னை ஏதும் தவறாக கருதுவாரோ என்று வருத்தமாக இருக்கிறது

நண்பர் கார்த்தியின் வலைபூ : http://karthikkavithaigal.blogspot.com/

அப்போது நான் காளியாபுரம் பழனியம்மாள் மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன்

எங்கள் வகுப்பு எப்போதுமே கலகலப்பானது , வகுப்பில் நான் , ராஜமாணிக்கம் , குமரேசன் ( நான் இல்லை மற்றொரு குமரேசன் ) முன்று பேரும் ஒன்றாக தான் இருப்போம் ஆளுக்கொரு பொண்ண செலக்ட் பண்ணி சைட் அடிப்போம் அது ஒரு அறியா பருவம் சரி விசயத்துக்கு வருகிறேன் , எங்க வணிகவியல் ஆசிரியர் எங்களிடம் உங்க rollmodel யாருன்னு கேட்டாரு அவனவன் என்னனோமோ ரீலு விடுகிறான் , காந்திகாரனுக , MGR நு ஒரு பாவிபய புள்ள சொல்லுது , என் முறை வந்தது நான் G.D.நாயுடுவை சொன்னேன் அவரை பற்றி தெரியுமா என்றார் எங்க ஆசிரியர் எனக்கு தெரிந்த கொஞ்சம் விசயத்த சொன்னேன் , மேலும் அவர் G.D.நாயுடுவை பற்றி சில தகவல்கள் சொன்னார்
பின்னர் முடிவு செய்து விட்டேன் வாழ்தால் G.D.நாயுடுவைபோல வாழ வேண்டும் என்று ! G.D. நாய்டுவை பற்றி நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

ஜி.டி. நாயுடு மார்ச் 23, 1893 - என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.

வாழ்க்கை

இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.

எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.

வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

தனித்திறன்கள்

இளம் வயதிலிருந்தே சிந்திக்கும் ஆற்றல், அயரா உழைப்பு, சுய முயற்சி என்பவற்றில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்த ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.

சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார்.

அப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

ஆரம்பத்தோல்விகள்

அவரையும் பேராசைப் பேய் பிடித்துக்கொள்ளவே அதிகப் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து வெறுங்கையுடன் ஊர் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அவரை ஒரு சாதாரண தொழிலாளராக அமர்த்திக்கொள்ள விரும்பவில்லை.

தாமாகவே முன்வந்து ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும். ஆனால், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.

சாதனைகள்

தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று இன்றிருக்கும் வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு!

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்!

இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக் கழக படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.

மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அந்நாட்டு நிறுவனங்கள் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்டன. அன்று நாட்டை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களின் தூண்டுதலே இதற்கு காரணமாயிருந்தது. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகள் பேடண்ட் செய்ய முடியாமலே போய்விட்டன.

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்துலட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.

அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’

இவ்வாதம் இக்காலத்திற்கு ஒவ்வாததாக தோன்றினாலும் அன்று நாட்டை ஆண்டுவந்தவர் ஆங்கிலேயர் என்பதைக் கருத்தில் கொண்டால் அவருடைய முடிவில் தவறேதுமில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.

எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.

அதே சமயம் நன்கொடை அளிப்பதில் இணையற்றவராக தோன்றினார். 1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.

அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.

இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார். அமைதியும் அடக்கமும் தன் தந்தையிடமிருந்து படித்தவர் இவர்.

நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.

இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.

அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.

விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!

அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.

அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.

நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றை பாராட்டாத தலைவர்களே இல்லையெனலாம்.

‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.

‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அண்ணா.

'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர்.சி.வி.ராமன்.

ஜி.டி. நாயுடு கற்றவருக்கு மேதை. கல்லாதவருக்கு புதிர். ஆற்றல் மிக்க அவர் அறிவியலையே தன் வாழ்க்கை என்று கருதினார்.

உழைப்பையே நம்பி ஊக்கத்தை உதறிவிடாமல் சுய முயற்சி, அயாரா உழைப்பு என்பவற்றை மட்டுமே நம்பி கோவை மக்கள் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே புகழ்ந்து பாராட்டும் வகையில் தன் வாழ்க்கையில் பிரகாசித்தவர் நம் ஜி.டி. நாயுடு.

அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பொருட்காட்சி இன்றும் அவருடைய அறிவுத்திரனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன!

வெள்ளித்திரையில் நான் கண்ட காதல் உண்மையென்று கருதி,
உன்னிடம் கெஞ்சினேன் மன்றாடினேன்.

நீயோ அதற்க்கு செவி சாய்க்கவுமில்லை,
மனமிறங்கி என்னை ஏற்கவுமில்லை.

உடைந்த இதயத்துடன் உன்னை மறக்கத்துடங்கிய நாட்களிலும்,
காலம் கற்றுத்தந்த கசப்பான பாடங்களை நான் மறக்கவில்லை.

மூன்று மணி நேர திரைப்படமும்,
நிஜமான வாழ்க்கையும் வேவ்வேறே!
இதை உணராமல் போனதும் என் தவறே.

காலம் கடந்து நான் கற்ற உண்மைகள்,
காலபோக்கிலும் மாறாதவைகள்.

ஆம், காதலுக்காக வாழ்க்கையை தியாகம் செய்வதில் பயனில்லை.
வாழ்க்கையில் ஜெயித்து காட்டினால், காதலுக்கோ பஞ்சமில்லை.


--இப்படிக்கு உன் நண்பன்.

என்மனம் நெடுஞ்சாலைபோல் நீண்டுகிடக்கிறது
உன் நினைவுகள் மட்டும் அதில் நடை போடுகிறது !
யாரென்றே தெரியாமல்!

உன் கல்லறைக்கு கோட்டைக்கட்ட
நான் கோமாளியும் இல்லை
நீ வாழும்போது கோட்டைக்கட்ட
நான் மகாராஜாவும் இல்லை !

நான் சுவாசிக்கும் காற்றைவிட மேலான
நேசிக்கும் காதலை கலந்து உலவவிட்டு
ஒரு குட்டி வீடு கட்டித்தருவேன்

கரிதுகள்களின் கன்னங்கள் சிவக்கிறது
எரிவதால் என்று எனக்கு தோன்றவில்லை
என்னை போல் யாரையோ காதலிப்பதால்தான் !

நானும் பலாக்கனி தான்
முரட்டு உருவதிற்குபின்னால்
உன்னை பற்றிய சுவையான
நினைவுகளோடு வாழும் தடியன் !

ஓடி ஒளிவது சூரியனானாலும்
உருவங்கள் மறைவது பூமியில்தான்
உன்னை தேடியலைவது என் நினைவுகளானாலும்
தேயாமல் வளர்வது என் காதலடி !

என் இனியவளே....

அன்று ஒற்றை ரோஜாவை உன்னிடம் தந்தேன்....
என் காதலை வெளிப்படுத்த.......

ஆனால் நீயோ அதை காலால் நசுக்கி
உன் வெறுப்பை வெளிகாட்டினாய்....

இன்று ஒரு பூங்கோத்தையே.....
என்னிடம் சமர்பிக்கின்றாய்.....

ஆனால் அதை உன்னிடமிருந்து வாங்க தான்
எனக்கு அனுமதியில்லை ....

ஏன் கல்லறையிடமிருந்து!!!!!!

உனக்காக தான் பூக்கள் பறித்து வர செல்கிறேன்,
இதை பிரிவு என்று எப்படி சொல்கிறாய்………..

உன்னிடம் பேச தான் சொற்கள் தேடி கொண்டிருக்கிறேன்,
இதை மௌனம் என்று எப்படி சொல்கிறாய்………….

உன்னை என் மனதோடு தானே ஒட்டி வைத்து இருக்கிறேன்,
இதை வெறும் நட்பு என்று எப்படி சொல்கிறாய்…………….


தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

வெடிவிழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காயந்த குடம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி வடிந்த சிறு முற்றம்

இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை
என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய சம்மதமா?

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ!
ஊஞ்சலாடிய முயலை
நீந்திப்பழகிய வாவி எல்லை

என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!

தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!


மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈழம் – நேற்றும் இன்றும்
தொடரின் தலைப்பு பாடல் இது.

உன்னோடு . . .
உன் வீட்டிற்கு வந்தால்
கொதிக்கும் தேனீர் கொடு
ஐந்து நிமிடங்கள் அதிகமாய்
இருக்கலாம் உன்னோடு . . .

எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை,

அலரும் அழைபேசி ,

காதலியின் நினைவுகள்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

சற்று கணத்துடன் மணிபர்ஸ் ,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , "மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு" எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..

இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

குமரேசன்
திரவியம் தேடி சென்னை வந்தவன்


என்ன தவறு செய்தேன் ?
புரியவில்லை .
ஏனோ -
இப்போதெல்லாம்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !

வாரம் ஒருமுறையல்ல...
மாதம் ஒருமுறை?
வேண்டாம் .....
இரண்டு மாதங்களுக்கு
ஒருமுறையாவது போதும்!

பார்வை தரும் சுகத்தைவிட
வெறுப்பு தரும் வேதனையை
ஜீரணிக்க முடிவதில்லை !

என்னைப் பற்றிய
தகவல்கள் தவறாக இருக்கலாம்!
ஆனால்
நான் தவறாவன் அல்ல!

எண்ணப் பற்றிய
கணிப்புகள் தவறலாம்!
ஆனால் ,
உன் மெது என் காதல்
தவறானதல்ல !

என்னைப் பற்றி
யாரோ முடிவு செய்வதைவிட
நியாக முடிவு செய்!
உன் முடிவு
எதுவானாலும் ஏற்றுக்
கொள்கிறேன் !

என் மிதான வெறுப்புக்கு
எது காரணம் ?
காரணம் எதுவாக இருப்பினும்
அது -
உன் முடிவாக இருப்பின் சரி !

என் வாழ்வையும் மரணத்தையும்
உன் முடிவு மட்டுமே
முடிவு செய்வதாய் இருக்கட்டும் !

இப்படிக்கு
உன்னை காதலித்த குற்றத்திற்காக உன் இதய சிறையில்
இடம்வேண்டி காத்திருக்கும்
~~~~~ குமரேசன்

என் உயிர்கூட எனக்கு
சொந்தமில்லை
ஏனென்றால் அது
ஏற்கெனவே அவளுக்காக
உயில் எழுதப்பட்டுவிட்டது

இரண்டு லட்சம் கொடுத்து
வாங்கினேன் - அரசு வேலை
லஞ்ச ஒழிப்புத்துறையில் ......

நீயும் பேசாதே
நானும் பேசாதிருக்கிறேன்
நாட்கள் மட்டுமல்ல
வருடங்களும் ஓடின
நீ பார்க்கும்போதெல்லாம்
எனக்குள்
இன்னும் அதே வலி!
உனக்கும்தான் வலிக்கும்
என் பார்வை
உன்னில் படர்கையில்
ஆக..
பார்வையாகவே உயிர்த்திருக்கிறது
நம்முள் மௌனமாய்
நமக்கான காதல்

பாதையோரத்துப் பாவங்களின்
விழியோரத்தில் நீர்ப்பூக்கள்..

தேசீயக் கொடிக்கம்பம் போல்
மெலிந்த தேகங்கள்
வாழ்விலும் தேக்கங்கள்...

வாழ்க்கையில் சாவைப் பார்த்துவிட்டு
சாவிலே இன்பம் காணத் துடிப்பவர்கள்...

இவர்களுக்கு வசந்தம் வருவதேயில்லை
சிலர் அதை ஆயுள் குத்தகை எடுத்ததால்..

மாதம் ஒருமுறை
வானத்தில் தோசை தரிசனம்..
பிற நாட்களில் மௌன அமாவாசை...

தூக்கத்தில் கூட
துக்கக கனவுகள்..

இவர்களுக்கு விழிப்புணவு வராமல்
பார்த்துக் கொள்ளும் இன்றைய சினிமாக்கள்...
கதைகளில் வாலிபத்தைக் காட்டி
நிஜங்களை கிழமாக்குபவர்கள்...

உழைத்துச் சலித்த இந்த ஊமையர்களை
குருடராக்கவும் செய்யும் ரசவாத வித்தைகள்...

இனி
ஒரு விதி செய்வோம்
அதை விளக்கமாய் வீதியில் வைப்போம்!

ரோசாப்பூ மனசுக்காரி
ரோசமுள்ள கோவக்காரி
ஆச வச்சேன் அவமேல
மீச வச்சேன் ஒதட்டு மேல
குளத்தங்கரைப் படிக்கட்டுல
குளிக்க வருவா வெடலப் புள்ள

கண்ணாலம் பண்ணவான்னு
கண்ணால கேட்டுப்புட்டேன்
முட்டக் கண்ணு சிவந்திருச்சு
கெட்ட கோவம் வந்திருச்சு
தப்புக் கணக்குப் போட்டுப்புட்டா
மைனருன்னு நினைச்சுப்புட்டா
பஞ்சாயத்தக் கூட்டிப்புட்டா
பருத்திபோல வெடிச்சுப்புட்டா
ஊர் கூடி திட்டினாக
உறவெல்லாம் சிரிச்சாக
மான மருவாதி கப்பலேறியாச்சு
ரெண்டாயிரம் கப்பங் கட்டியாச்சு

அவ மேல ஆசப்பட்ட கதைய
எவகிட்ட சொல்லி அழுவ?
மண்ணுக்குள்ள வயிரம்போல
மனசுக்குள்ள காதல் கெடக்கே!
ரெண்டு நாளு பட்டினி கெடந்தேன்
பட்டணம் போக மூட்ட கட்டுனேன்
கருத்தப் புள்ளய காதலிச்ச கதய
கடுதாசியில இறக்கிவெச்சேன்

வெடுவெடுன்னு நடந்து போயி
வீசிப்புட்டேன் அவ மேல
திரும்பிக்கூடப் பார்க்காம
பதிலேதும் கேட்காம
வீறாப்பாக் கெளம்பி
வெரசா ரயிலப் புடிச்சுப்புட்டேன்
வெறப்பா வந்தாலும்
முறப்பா நின்னாலும்
உள்ளுக்குள்ள துடிதுடிக்குது
உசிருக்குள்ள அவ நினப்பு!
புகையக் கக்கிப்புட்டு
கெளம்புது செவத்த ரயிலு!
ரயிலுக்கும் எரியுமோ
என்னப்போல உள்மனசு?
கண்ண மூடி ஒக்காந்தா
கனவுல அவ முகம்
கண்ணு முழிச்சுப் பார்த்தா
எதிர்தாப்புல அவமுகம்!
கனவா நனவான்னு
தெரியாம நா(ன்) குழம்ப
முத்துப்பல்லு காட்டி
முல்லப்பூ அவ சிரிக்கா!
கண்ணால புரியாத காதல
கடுதாசியால புரிஞ்சிருக்கா
ஓன்னு அழுதிருக்கா
ஓடோடி வந்திருக்கா
தாலி கட்டப் போறேன்
தாரமாக்கப் போறேன்
பட்டணம் போயி, பத்தாயிரம்
சம்பாதிக்கப் போறேன்
கண்ணாலம் பண்ணப்போறேன்
கருத்த புள்ளகூட வாழப்போறேன்
ஏலேய் ட்ரைவரு!
வெரசா ஓட்டு இது ரயிலு வண்டியா
இல்ல கட்ட வண்டியா?

இணையதளத்தில் நான்
உன்னிடம் அறிமுகமானாலும்
என் இதையத்தின் அடித்தளம்
வரை நீ சென்று விட்டாய்..!

குறையாத ஒலியோடு
குறுந்தொகை செய்தி
ஒன்று என்னை தேடிவரும்
தினம்தோறும் உன்னிடம் இருந்து....

உன்கரம் பற்றிய பின்னரே
காதல் செய்ய ஆசைபட்டேன்
அந்நாள் வாரும் வரை
காத்திருக்கிறேன்..நான்
இன்று வரை
சொல்லியது இல்லை
உன்னை நான்
நேசிக்கிறேன் என்று..!

சிதறிய எண்ணங்களை
என்னுள்
சேர்க்கவே உனது பார்வையில்
விழுகிறேன் தினமும்..
ஏனென்றால்...?
எனது எண்ணங்களை
வண்ணங்களாக்கும்
திறன் உனது
பார்வைக்கு மட்டுமே....
உண்டு என்பதால்.....!

இதழ் பிரித்து நீ
உதிர்க்கும் வார்த்தைக்காகவே..
காத்திருக்கிறேன்..
என் இதயம் திறந்து..
உனக்காக..
விழி மூடும் முன்னே....
விளகேத்தி வை..
என் வாழ்க்கை வெளிச்சமாகட்டும்
உன்னால்...!

மண்ணில் நீரை தேடி
பரவும் வேரை போல..
உனது இதயத்தை
தேடி பரவுகின்றன...
கவிதை வழியாக...
எனது காதல்!

நீ உதிர்த்த வார்த்தைகளை
பூக்களை போல
சேகரிக்கிறேன்..
என் இதய தட்டில்..
ஏன் தெரியுமா?
இதயம் கவர்ந்த
உனக்கு கவிதை
மாலை சூட!

மலர் பறித்த கைகள்...
இதழின் மென்மையை
உணர்ந்தது இல்லை
ஒரு நாளும்...
உன் கை இதழ்கள்.
பட்டபோது உணர்ந்தேனடி
இன்று..
மென்மையின் தன்மையை.!

உன் கூந்தலில் இருக்கும்
வளைவு நெளிவுகளில்
என் வார்த்தைகளும்
பரிணமிக்கின்றன
கவிதையாக...!

நீ இன்றி ஒரு அணுவும்
அசையாது என்னுள்.
நீ பேசாத பொழுதுகள்
விடியாதா நாட்கள்
என் வாழ்கையில்..
முடிவு பெறாத
என் கவிதைக்கு
முற்றுபுள்ளி வைத்துவிடு
என் காதலுக்கும் சேர்த்து....!

Lunax Free Premium Blogger™ template by Introblogger