இணையதளத்தில் நான்
உன்னிடம் அறிமுகமானாலும்
என் இதையத்தின் அடித்தளம்
வரை நீ சென்று விட்டாய்..!
குறையாத ஒலியோடு
குறுந்தொகை செய்தி
ஒன்று என்னை தேடிவரும்
தினம்தோறும் உன்னிடம் இருந்து....
உன்கரம் பற்றிய பின்னரே
காதல் செய்ய ஆசைபட்டேன்
அந்நாள் வாரும் வரை
காத்திருக்கிறேன்..நான்
இன்று வரை
சொல்லியது இல்லை
உன்னை நான்
நேசிக்கிறேன் என்று..!
சிதறிய எண்ணங்களை
என்னுள்
சேர்க்கவே உனது பார்வையில்
விழுகிறேன் தினமும்..
ஏனென்றால்...?
எனது எண்ணங்களை
வண்ணங்களாக்கும்
திறன் உனது
பார்வைக்கு மட்டுமே....
உண்டு என்பதால்.....!
இதழ் பிரித்து நீ
உதிர்க்கும் வார்த்தைக்காகவே..
காத்திருக்கிறேன்..
என் இதயம் திறந்து..
உனக்காக..
விழி மூடும் முன்னே....
விளகேத்தி வை..
என் வாழ்க்கை வெளிச்சமாகட்டும்
உன்னால்...!
மண்ணில் நீரை தேடி
பரவும் வேரை போல..
உனது இதயத்தை
தேடி பரவுகின்றன...
கவிதை வழியாக...
எனது காதல்!
நீ உதிர்த்த வார்த்தைகளை
பூக்களை போல
சேகரிக்கிறேன்..
என் இதய தட்டில்..
ஏன் தெரியுமா?
இதயம் கவர்ந்த
உனக்கு கவிதை
மாலை சூட!
மலர் பறித்த கைகள்...
இதழின் மென்மையை
உணர்ந்தது இல்லை
ஒரு நாளும்...
உன் கை இதழ்கள்.
பட்டபோது உணர்ந்தேனடி
இன்று..
மென்மையின் தன்மையை.!
உன் கூந்தலில் இருக்கும்
வளைவு நெளிவுகளில்
என் வார்த்தைகளும்
பரிணமிக்கின்றன
கவிதையாக...!
நீ இன்றி ஒரு அணுவும்
அசையாது என்னுள்.
நீ பேசாத பொழுதுகள்
விடியாதா நாட்கள்
என் வாழ்கையில்..
முடிவு பெறாத
என் கவிதைக்கு
முற்றுபுள்ளி வைத்துவிடு
என் காதலுக்கும் சேர்த்து....!
1 comments:
All the poems are good nanba :)
Post a Comment