நீயும் பேசாதே
நானும் பேசாதிருக்கிறேன்
நாட்கள் மட்டுமல்ல
வருடங்களும் ஓடின
நீ பார்க்கும்போதெல்லாம்
எனக்குள்
இன்னும் அதே வலி!
உனக்கும்தான் வலிக்கும்
என் பார்வை
உன்னில் படர்கையில்
ஆக..
பார்வையாகவே உயிர்த்திருக்கிறது
நம்முள் மௌனமாய்
நமக்கான காதல்

0 comments:

Lunax Free Premium Blogger™ template by Introblogger