இந்த சில நாட்களுக்கு முன்னர் நான் எனது வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது சிறிய விபத்து ஒன்று ஏற்பட்டது , நான் வண்டியில் இருந்து நிலைதடுமாறி ரோட்டில் விழுந்து விட்டேன் , கிழே விழுந்து கிடந்த என்னை தூக்கிவிட பலர் வந்தனர் அதில் ஒரு மலையாளியும் ஒருவர் ,
இதை ஏன் இங்கே சொல்லுகிறேன் என்றால் ஒரு தமிழன் இங்கு விழுந்ததிற்கு அவனுக்கு கைகொடுக்க பலர் வந்தனர் , ஆனால் இலங்கையில் எனது உறவினர்கள் கொட்டு கொத்தாக குண்டு வீசி கொன்றபோதும் இப்போது அகதிகள் என்ற பெயரில் திறந்த வெளி சிறைச்சாலையில் அவர்களை அடைத்து ஒருவேளை உணவுமட்டும் கொடுத்து சிறிது சிறிதாக கொள்ளப்படும் என் சொந்தங்களுக்கு கைகொடுக்க யாரும் வரவில்லையே ???? ஏன் ? தெரிந்தால் யாரும் சொல்லுங்கள் , மனிதநேயம் இவ்வளவு தானா ? , கண்முன் நடந்தால் மட்டுமே உதவிக்கு ஆள் வருவார்களா , ஒருவேளை ஈழ தமிழர்கள் நிலைமை தமிழ் நாட்டு மக்களுக்கு வந்தால் நமக்கும் அந்த கதி தானா ?
0 comments:
Post a Comment