என்மனம் நெடுஞ்சாலைபோல் நீண்டுகிடக்கிறது
உன் நினைவுகள் மட்டும் அதில் நடை போடுகிறது !
யாரென்றே தெரியாமல்!

உன் கல்லறைக்கு கோட்டைக்கட்ட
நான் கோமாளியும் இல்லை
நீ வாழும்போது கோட்டைக்கட்ட
நான் மகாராஜாவும் இல்லை !

நான் சுவாசிக்கும் காற்றைவிட மேலான
நேசிக்கும் காதலை கலந்து உலவவிட்டு
ஒரு குட்டி வீடு கட்டித்தருவேன்

கரிதுகள்களின் கன்னங்கள் சிவக்கிறது
எரிவதால் என்று எனக்கு தோன்றவில்லை
என்னை போல் யாரையோ காதலிப்பதால்தான் !

நானும் பலாக்கனி தான்
முரட்டு உருவதிற்குபின்னால்
உன்னை பற்றிய சுவையான
நினைவுகளோடு வாழும் தடியன் !

ஓடி ஒளிவது சூரியனானாலும்
உருவங்கள் மறைவது பூமியில்தான்
உன்னை தேடியலைவது என் நினைவுகளானாலும்
தேயாமல் வளர்வது என் காதலடி !

0 comments:

Lunax Free Premium Blogger™ template by Introblogger