முதல் தேதிகளில்
கவலைகளை
மறக்க எண்ணி...!

ரயிலோ
பஸ்ஸோ
நெரிசல்களில் சிக்கி
வேலைக்கும் வீட்டுமாய்
தினசரி அல்லல்கள்..

மாதம் பிறந்துவிட்டது
பாலுக்கும் அரிசிக்கும்
பாக்கி போக
மிச்சப்பட்டிருப்பது
விரல்கள் மட்டுமே

தினசரி
விடிகிறது பொழுது
கழிகிறது நிமிஷம்
காலம் என்ற ஓட்டை பானையில்
உயிர் சிந்தி
உழைப்பை கொட்டி

தொலைந்து போகிறது வாழ்க்கை!

1 comments:

Anonymous said...

உங்களது வலைத்தளத்தில் காலம் என்ற ஓட்டைப்பானை என்ற கவிதை படித்தேன்.
இதை எழுதியவர் பெயர் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எப்போதும் மற்றவர்களின் சிந்தனைக்கும், எழுத்துக்கும் அடுத்தவர் உரிமை கொண்டாடுவது என்பது முற்றிலும் தவறான் ஒரு விசயம், அது ஏற்றுக்கொள்ளகூடியதும் அல்ல. வலைத்தளத்தில் இடுகைகளை வெளியிடும் போது அது மற்ற வலைத்தளத்திலோ அல்லது இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தால் எழுதியவர் பெயரை குறிப்பிட்டு அந்த எழுத்து குறித்த உங்கள் விமர்சனத்தை எழுதுவது நல்லது.

Lunax Free Premium Blogger™ template by Introblogger